""ரயிலுல நாம போறதுக்கும் நம்ம மேல ரயில் போறதுக்கும் என்ன ஒற்றுமை சொல்லுங்க பார்ப்போம்?''
""ஒரே ஒற்றுமைதாங்க... ரெண்டுலையும் நாமதான் டிக்கெட் எடுப்போம்''
பீ.ஆர்.பூஜா ரமேஷ், ஒரத்தநாடு .
""பாத்திரக்காரன் கிட்டே பேரம் பேசி பாத்திரம் வாங்கினியா?''
""ஆமா... ஏன் கேட்குறீங்க?''
""இந்தப் பொம்பளைகிட்டே எப்படித்தான் கணவன் குடும்பம் நடத்துறாரோன்னு மோசமா திட்டிட்டுப் போறான்''
செ.தர்மலிங்கம், திருச்சி-17.
""டிவி சீரியலுக்கு கதை எழுதுறவரிடம் பத்திரிகைக்கு தொடர் கதை கேட்டது தப்பாப் போச்சு''
""ஏன்?''
""100 வாரம் எழுதட்டுமான்னு கேட்கிறாரே?''
""நிச்சயதார்த்தம் முடிஞ்சுட்டுதே... இது என்ன புதிய ஒப்பந்தம்?''
""நிச்சயதார்த்தம் முடிஞ்ச பின்னால புதுசா எதுவும் கேட்க மாட்டோம்ன்னு மாப்பிள்ளை வீட்டார் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாங்க''
மயிலை மாதவன், சென்னை-42 .