மைக்ரோ கதை

ஒருவன் உருக்கமாக வேண்டினான். கடவுள் அவன் முன் தோன்றினார். "எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே!
மைக்ரோ கதை

ஒருவன் உருக்கமாக வேண்டினான். கடவுள் அவன் முன் தோன்றினார். 
"எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே! ஏன் அவளை இவ்வளவு கருணை உள்ளத்தோடு படைத்தாய்?'' என்று கேட்டான் அவன்.
கடவுள் சொன்னார்: "அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"ஆமாம், ஏன் இவ்வளவு அழகியாகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"இருக்கட்டும்... ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல் நிபுணராகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
கடைசியாக அவன் கேட்டான்: 
"எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்''
கடவுள் நிதானமாகச் சொன்னார்:
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
சி.ரகுபதி, 
போளூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com