ஒருவன் உருக்கமாக வேண்டினான். கடவுள் அவன் முன் தோன்றினார்.
"எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே! ஏன் அவளை இவ்வளவு கருணை உள்ளத்தோடு படைத்தாய்?'' என்று கேட்டான் அவன்.
கடவுள் சொன்னார்: "அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"ஆமாம், ஏன் இவ்வளவு அழகியாகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"இருக்கட்டும்... ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல் நிபுணராகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
கடைசியாக அவன் கேட்டான்:
"எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்''
கடவுள் நிதானமாகச் சொன்னார்:
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
சி.ரகுபதி,
போளூர்.