திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் ராஜகம்பீர மலையில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்திபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோயில்.
வருடந்தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெறும். புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று காலை ஆறு மணியளவில் சூரியனின் ஒளிக்கதிர் மூலவர் பாதத்தில் படரும்.
இந்த ஒளி தினமும் மேல் நோக்கி நகர்ந்து கடைசி சனிக்
கிழமை அன்று மூலவர் ஸ்ரீ கோபால சுவாமி சிரசில் படரும் அற்புதத் தரிசனத்தைக் காணலாம்.
- டி.ஆர். பரிமளரங்கன்