நிகழ்வுகள்

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை சாலை, அல்லிகுளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட

மஹா கும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை சாலை, அல்லிகுளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ மஹா பைரவர் பீடத்தில் ஸ்ரீ மஹா பைரவர், லிங்கேஸ்வரர், கணபதி, ராகு- கேதுக்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது. 
நாள்: 10.12.2017, நேரம்: காலை 7.30 - 9.00 மணி.
திருப்பணி
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அமைந்து பக்தர்களின் அச்சத்தைப் போக்கி அருள்பாலிக்கும் தச்சங்குளம் மாரியம்மன் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாலும் கிராம சமுதாய கமிட்டியினர் நன்னிலம் சோத்தக்குடி, மாதாகோயில் தெரு கிராமவாசிகள், விழாகுழுவினர் உதவியுடன் திருப்பணி வேலைகள் உடனடியாக துவங்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயில் திருப்பணிகளில் பக்தர்கள் பங்குகொண்டு நல்லறருள் பெறலாம்.
தொடர்புக்கு: 94451 59851.
- எம். பார்த்தசாரதி
திருப்புகழ்த் திருப்படி விழா
அருணகிரிநாதரால் பாடல்பெற்ற ஞானமலை முருகன் கோயிலில் 17 ஆவது ஆண்டு திருப்புகழ்த் திருப்படி விழா நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு லட்சார்ச்சனை, அருணகிரிநாதருக்கு காட்சிவிழா, பாற்குட ஊர்வலம், வெற்றி வேல் பூஜை, திருப்படி பூஜை போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. இத்திருத்தலம், காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 14 கி. மீ. தொலைவில் மங்கலம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. 
தொடர்புக்கு : 94444 18526 / 90032 32722.
நாள்: 9.12.2017, 10.12.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com