* இறைவன் ஒருவர்தான்; எல்லா உயிர்களும் அவருடைய சொரூபம்தான். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, "அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறே'' என்று இந்தப் பிரிவினை எல்லாம் ஏன்?
* இந்த உடல் எனக்கு ஒரு விளக்கு; என் உயிரே இந்த ஒளிக்கான திரி; என் இரத்தமே எண்ணெய்; இவை கொண்டு இறைவனைக் காண்பதற்காகவே நான் வாழ்கிறேன்.
- கபீர்தாசர்
* உன்னிடமும், என்னிடமும் மற்ற எல்லா இடங்களிலும் சர்வ வியாபகமான பிரம்மம் (பரம்பொருள்) ஒன்றுதான் இருக்கிறது.
* பொறுமை இல்லாததால் நீ என்னிடம் தேவையில்லாமல் கோபம் கொள்கிறாய். பரம்பொருளை நீ அடைய விரும்பினால், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சமநிலை மாறாத மனநிலையுடன் இரு
- சங்கரர்
* அறம் என்ற நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை உடலில் பூசிக்கொள். அப்போது உன் முகம் ஆன்மிக ஒளியுடன் திகழும். கொடுக்கும் இறைவன், உன் மேல் ஆயிரக்கணக்கான அன்பளிப்புகளை அள்ளிக் குவிப்பார்.
* இறைவன் ஒருவன்தான்; ஆயினும் அவனுக்கு எண்ணற்ற தோற்றங்கள் உண்டு. அனைத்தையும் படைத்தவன் இறைவன். அவனே மனித உருவம் எடுப்பதும் உண்டு.
* சக்தி நிறைந்த நீர் மேல் நிமிர்ந்து உயர நிற்கும் தாமரை போலவோ, நீரினால் பாதிக்கப்பட முடியாத இறக்கைகளுடன் காற்றிலே உயரப் பறக்கும் கடல் பறவை போலவோ, இந்த உலகில் பற்று இல்லாமல் நீங்கள் வாழ்க்கை நடத்துங்கள்.
* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால் மனத்தூய்மை இல்லாமல் இறைவன் பெயரை உச்சரிப்பதால் மட்டும், ஒருவர் இறைவனை அடைய முடியாது.
- குருநானக்