திருப்பணி
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, அச்சுதமங்கலத்தில் அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது. அருள்மிகு சௌந்தர நாயகி சமேத சோமநாத சுவாமி ஆலயத்திற்கு மேற்கிலும் அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் ஆலயத்திற்கு கிழக்கிலும் அமைந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ நடராஜப் பெருமான் பஜனை மடம் மிகவும் பழுதடைந்துள்ள படியால் புதிதாக நிர்மாணம் செய்யும் பொருட்டு திருப்பணி வேலைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு இறைவனின் திருவருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 94440 75714.
மஹா சம்ப்ரோக்ஷணம்
திருப்பூர் மாவட்டம், தொங்குட்டிபாளையம் கிராமம், தொங்குட்டிபாளையம் பிஏபி வாய்க்கால் கரையில் சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு சுயம்பு காரணப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீ பூமி தேவி ஸ்ரீ நீளா தேவி சமேதராக ஸ்ரீ சுயம்பு காரணப்பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் திருப்பணிகள் நிறைவுபெற்று, மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
நாள்: 30.3.2017, நேரம்: காலை 9.00 - 10.30 மணி.