நிகழ்வுகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, 69 - திருமூலர் சாத்தனூர் கிராமம், திருமூலநாயனார் திருக்கோயிலில் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை

குருபூஜை விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, 69 - திருமூலர் சாத்தனூர் கிராமம், திருமூலநாயனார் திருக்கோயிலில் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94444 31691.
நாள்: 3.11.2017.
*******************
திருவண்ணாமலை மாவட்டம், போளூர், ஸ்ரீமத் விடோபா சுவாமி மடத்தில் ஸ்ரீமத் விடோபா சுவாமிகளின் 108 ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் ஆராதனை பெருவிழா நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94424 55933.
நாள்: 8.11.2017.
உழவாரப்பணி
கவரப்பேட்டை, அரியதுறை கிராமம் , அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில், திருக்கோயில் உழவாரப்பணி மன்றத்தினர், சார்பில் உழவாரப்பணி,  வெள்ளையடிக்கும் பணி,  திருமுறை இன்னிசை மற்றும் கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெறுகின்றது. 
நாள்: 5.11.2017.
திருத்தலத் திருப்பணி
சைவம் தழைத்தோங்கிய காலம் அது. பரந்து விரிந்த சோழ தேசத்தின் எல்லா கிராமங்களிலும் பிரமாண்டமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களும் மாடுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டு செவ்வனே பராமரிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் பாண்டிய தேசத்திலும், சேரநாட்டிலும், பல்லவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஊர்களிலும் வைணவம் சிறப்புறத் தழைத்திலிருந்தது. எங்கு திரும்பினாலும் சிவாலயங்களும் வைணவக் கோயில்களும் சரிசமமாகவே இருந்தன. ஊரில் ஏதேனும் விசேஷம், ஆடிப்பாடுதல், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. 
சிவனாரின் மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப்பகுதியில் ஸ்ரீகோதண்ட ராமருக்கு அழகிய கோயிலைக் கட்டினான். அற்புதமான கோலத்தில் சீதாதேவி லட்சுமணர் சமேதராக கோதண்டராமர். இவரைத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் நீங்கும்.  
இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகோதண்டராமன் பேரழகுடன் அத்தனை செளந்தர்யத்துடன் சேவை சாதிக்கிறான். பிரிந்த தம்பதிகள், குழந்தைப்பேறு ஏற்படாதவர்கள் ஆகியோர்க்கு மிகுந்த வரப்பிரஸாதியாக பரமானுக்ரஹம் செய்யும் ஸ்ரீராமன் இவர். இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.  இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து,  23-11-2017 அன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.   
தொடர்புக்கு: 78710 42423.
- பொ.ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com