• செல்வம் இல்லாத காலத்திலும், தங்களால் முடிந்த அளவு, செல்வம் உடையவர்களைப் போன்று மிகவும் மகிழ்ச்சியோடு ஏழைகளுக்குக் கொடுக்கும் நற்குணம் உடையவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.
- நாலடியார்
• தாய் தந்தையர்கள், குரு முன்னிலையில் பரிகாச வார்த்தைப் பேசுவதும், படபடப்புக் கொள்வதும், கோபம் முதலியவற்றைக் காட்டுவதும் பாவமாகும். இத்தகைய பாவங்களைச் செய்பவன் மறுபிறவியில் கண்கள் இல்லாமல் பிறப்பான்.
• மனிதர்கள் வாழ்க்கையில் அடக்கம், பொறுமை, சத்தியம், குருபக்தி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மறுபிறப்பு இல்லாமல் இருப்பதற்கு நல்ல வழி இந்தப் பிறவியில் இறைவன் மீது பக்தியை வளர்த்துக்கொள்வதுதான்.
• மனிதன் தன் முயற்சியாலேயே உயர்ந்த நிலைக்கு வருகிறான். தன் தீய செயல்களாலேயே கீழ்நிலைக்குப் போகிறான். அவனுடைய ஆசாபாசங்கள், பிரக்ஞை, அறிவு, எண்ணங்கள் எல்லாம் அவனுக்கே உரியவை. மற்றவர்கள் யாரும் அவனைக் காப்பாற்ற முடியாது. அவனேதான் அவனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தியானத்தின் மூலம் அவன் தன் வாழ்க்கையைச் சிறப்பாக்கிக்கொள்ள முடியும்.
- மயான யோகி
• சுயபுத்தி இல்லாதவர்கள் சொல்புத்தி கேட்டுத் தீங்கான காரியங்களைத் திடீரென்று செய்துவிடுவார்கள். நாலும் தெரிந்தவர்கள் ஒன்றுக்கு நாலு தரம் யோசித்தே எதையும் செய்வார்கள்.
- விவேகசிந்தாமணி
• திருப்தி என்ற அமுதத்தை உட்கொண்டு மனச்சாந்தி பெறுவதால் உண்டாகும் மகிழ்ச்சி, பொன்னை அடைவதற்காக இங்கும் அங்கும் சதா அலைந்து திரிகிறவர்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது.
- பஞ்சதந்திரம்
• துன்பம் தலைக்கு மேல் வந்தால் இறைவனை நினைக்கிறார்கள். செல்வம் வந்து நிலைமாறினால் அவர்கள் இறைவனை மறந்துவிடுகிறார்கள். மனிதன் எப்பொழுதும் ஒரே நெறியிலிருந்தால் என்ன குறைந்துவிடும்? மனிதன் இப்படித் திடீரென மாறுவதற்கு காரணம் யார் செய்த பாவமோ தெரியவில்லை.
• "கனவு போன்று நிலையற்ற இந்த உலகத்தை உண்மையானது' என்று தவறாக உணர்ந்து, அதில் பெண், பிள்ளை, மனைவி ஆகிய பாசத்தாலும் கட்டுண்டு அனைவரும் பரமனை மறந்துவிடுகிறார்கள்.
- யோகி வேமனா