இருகைகள்,இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பட வணங்குதல் "பஞ்சாங்க நமஸ்காரம்' எனப்படும்.
தலை மட்டும் குனிந்து வணங்குதல் "ஏகாந்த நமஸ்காரம்' எனப்படும்.
தலை மேல் இருகரம் கூப்பி வணங்குதல் "திரியங்க நமஸ்காரம்' எனப்படும்.
இருகைகள், இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பட வணங்குதல்
"பஞ்சாங்க நமஸ்காரம்' எனப்படும்.
இரு கைகள், மார்பு, இரு முழங்கால்கள் பூமியில்பட வணங்குதல் " சாஷ்டாங்க நமஸ்காரம்' எனப்படும்.
தலை, இருகைகள், இரு செவிகள், இரு முழங்கால்கள், மார்பு இவை அனைத்தும் பூமியில் படும்படி வணங்குதல் "அஷ்டாங்க நமஸ்காரம்" எனப்படும்.
மூன்று வகை அன்னதானம்!
அன்னதானம் செய்தல் என்பது ஒரே செயலேயானாலும் அது யாருக்கு செய்யப்படுகிறதோ அதையொட்டி அதனுடைய பெயரும் மாறுகின்றது. அடியார்களுக்கு அன்னதானம் செய்வதை " மகேஸ்வர பூஜை' என்றும்; ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் அன்னதானம் "அன்னம் பாலிப்பு' என்றும்; ஏழை எளிய மக்களுக்கு அன்னமிடுவது "அன்னதானம்' என்றும் கூறப்படுகிறது.
- கே. லலிதா