நிகழ்வுகள்

நுங்கம்பாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக

மஹாசண்டி ஹோமம்
நுங்கம்பாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக செப் 29, 30 தேதிகளில் மஹாசண்டி ஹோமம் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு:  044 - 2827 0990. 
ஸ்ரீ ராதா மாதவ விவாஹ மகோத்ஸவம்
குரோம்பேட்டை, நியூகாலனி திருக்கோயில்கள் திருப்பணி சங்கம் சார்பில் 7 - ஆவது ஆண்டு நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ ராதாமாதவ விவாஹ மகோத்ஸவம் சி.எல். சி, ஒர்க்ஸ் சாலையில் உள்ள சக்தி திருமண மாளிகையில் அக்டோபர்- 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுகின்றது. சென்னை ஸ்ரீ காந்த் பாகவதர் குழுவினர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். 
தொடர்புக்கு: 044 -2238 6860/  94448 49990.
திருப்பணி
புதுதில்லி, ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 7 -இல் அமைந்துள்ள உத்தர ஸ்வாமி மலை அருள்மிகு ஸ்வாமி நாதப் பெருமானின் திருக்கோயிலில் தங்கரதம் ஓடுவதற்காக இரண்டாவது பிரகாரத்தை விரிவுபடுத்தி, உறுதி செய்து கருங்கல் பதித்து செப்பனிடும் திருப்பணி நடைபெறுகின்றது. மேலும் வயோதிகர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுவர்கள் சிரமமில்லாமல் நடந்து செல்ல ஏதுவாக சாய்வு நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று செயல்பட்டு வருகிறது.  சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ரதம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு இறையருள் பெறலாம்.
தொடர்புக்கு: 011 - 2617 5104.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com