காஞ்சிபுரத்திற்கு தெற்கே சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ளது "வானவன் மாதேவீச்சுரம்' - ஸ்ரீ வீனந்தேஸ்வரர் திருக்கோயில். இங்கு இறைவன் லிங்க ரூபத்தில் அருள்புரிகிறார். தைப்பூச நன்னாள் அன்று காலை 6.00 மணி அளவில் சூரியன் தன் ஒளிக்கதிர்களை லிங்கத்தின் மீது படரவிட்டு வழிபடும் அற்புதத் தரிசனத்தைக் காணலாம். இதனை, "சூரியபூஜை' என்று போற்றுவர். சுமார் 30 நிமிடங்கள் இந்தத் தரிசனம் நடைபெறும். இதனைத் தரிசித்தால் புனிதம் சேரும் என்பது ஐதீகம்!
- டி.ஆர் பரிமளரங்கன்