பாகிஸ்தானில் விமான விபத்து: 47 பேர் பலி?

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி சென்ற அந்நாட்டு விமானம் மலைப்பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கியது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி சென்ற அந்நாட்டு விமானம் மலைப்பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கியது. அதில் பயணம் மேற்கொண்ட 47 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
கைபர்- பக்துன்ங்வா மாகாணத்தில் உள்ள சிட்ராலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு 47 பேருடன் ஒரு விமானம் புதன்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது.
அப்போது அப்போட்டாபாத் அருகே காரிஸன் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் செல்லும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து அந்த விமானம் மறைந்தது.
எனவே, அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் அதில் பயணம் மேற்கொண்ட 47 பேர் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டரின் உதவியுடன் ராணுவத்தினர் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த நாளிதழில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com