கோஸ்டா ரிகாவில் வியாழக்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தலைநகர் சான் ஜோஸிலிருந்து வடக்கே 25 கி.மீ. தொலைவில் உள்ள சின்சோனா கிராமத்துக்கு அருகே வியாழக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.
கோஸ்டா ரிகாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து செங்குத்தான மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்துஉருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாககருதப்படுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.