பாகிஸ்தானில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஜெய்ஸ் - இ - முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அஸார் உட்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.


இஸ்லாமாபாத்: ஜெய்ஸ் - இ - முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அஸார் உட்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை அடுத்து, 5,100 பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளோம். இதன் மூலம் வங்கிகளில் சுமார் ரூ.400 மில்லியன் அளவுக்கு பணம் முடக்கப்பட்டுள்ளது என்று பாங்க் ஆப் பாகிஸ்தான் வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

5,100 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமான பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் என்றும், இந்த பட்டியலில்தான் மசூத் அஸாரும் இடம்பெற்றுள்ளான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com