பேருந்து விபத்து: நேபாளத்தில் 18 பேர் பலி

நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் பலியாகினர்.
தடிங்பேஷி என்னுமிடத்திலிருந்து மார்பாக் என்கிற இடத்துக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து மலைப் பாதையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் 300 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்தது. இதில் 4 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக அவர்கள் தலைநகர் காத்மாண்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மற்ற பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com