பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 100 பேர் பலி

பாகிஸ்தானில் வழிபாட்டு தலமான மசூதியில் நடத்தப்பட்ட‌‌‌‌ தற்கொலைப் படைத் தாக்குதலில்‌ சு‌மார் நூறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் வழிபாட்டு தலமான மசூதியில் நடத்தப்பட்ட‌‌‌‌ தற்கொலைப் படைத் தாக்குதலில்‌ சு‌மார் நூறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சி‌ந்து மாகாணத்தில் உள்ள ஷெவான் ஷெ‌ரிப் என்ற இடத்தில் சுஃபி பிரிவினரின் வழிபா‌ட்டுத் தலமான லால் ஷாபாஸ் மசூதியில் ஏராளமானோர் திரண்டிருந்த போது, ‌தனது உடம்பில்‌ கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டுகளுடன் வந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர், அங்கிருந்தவ‌ர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக முதலில் சில கையெறி கு‌ண்டுகளை ‌வீசினார்.

பி‌ன்‌னர் தனது உடம்பில் கட்டியிருந்த குண்டு‌ளை வெடிக்கச் செய்து தாக்கு‌தல் நடத்தினார். இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் உடல் சிதறி‌ உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த பலர‌து நிலைமை கவலைக்கிடமாக இருப்ப‌தால் உ‌யிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் ‌என அஞ்சப்படுகிறது.‌

தாக்குதலை வன்‌மையாகக் கண்‌டித்துள்ள பிரதமர்‌ நவாஸ் ஷெரிப், ‌இதற்கு எதிராக மக்கள் ஒருங்கி‌ணைய வேண்டும் என‌க்‌ கேட்‌‌டுக் கொண்டுள்ளார்‌.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com