சென்னை: மூன்று கால்களுடன் ஒரு பெண் இருப்பது போன்ற புகைப்படமானது தற்போது பார்ப்பவர்களைக் குழப்பி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் இளம்பெண் ஒருவர் கால்கள் மடங்கிய நிலையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமானது இணையதளங்களில் வைரல் ஆனதுடன் பார்ப்பவர்களைக் குழப்பி கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. என்ன காரணம் என்றால் அதில் காணப்படும் பெண் மூன்று கால்களுடன் அமர்ந்திருப்பது போன்று தோற்றமளிப்பதே ஆகும்.
இது காட்சிப்பிழையால் ஏற்படும் வெறும் மாயத் தோற்றம் தான் என்பது அந்தப் படத்தை மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தாலே மட்டும்தான் தெரிய வருகிறது. புகைப்படத்தில் காணப்படும் பெண்ணின் வலதுபுறத்தில் தோன்றும் மூன்றாவது கால் போன்ற உருவமானது அவருடையது அல்ல. அவர் கையில் பிடித்திருக்கும் பூஜாடியின் உருவம்தான் நமக்கு மூன்றாவது கால் போல் தென்படுகிறது என்பதுதான் இதில் விசேஷம்.
பலராலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.