இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி20 12-வது மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது கடந்த 70 வருடங்களில் இந்தியாவின் வரி முறையில் ஏற்பட்டுள்ள தலைசிறந்த புரட்சியாகும்.
இந்தியாவின் பொருளாதார நிலை 7 சதவீத ஜிடிபி-யுடன் சீரான வளர்ச்சியை அடைந்து வருகிறது. உலக நாடுகளின் பொருளாதார முறைக்கு சவால் விடும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலக பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்றார்.