டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் கெர்மான் மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள சுற்றுலா தலமாக விளங்கும் சிர்க் பகுதியில் இன்று திங்கள்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், ரிக்டரக் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவானது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருள் சேதம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை. அந்த பகுதியில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பெரும்பாலான சுவர்களில் விரிசல் காணப்படுவதாக தகதவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.