சீனாவில் கத்திக் குத்து; கார் மோதல்: ஒருவர் பலி

சீனாவில் ஐந்து பேரைக் கத்தியால் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்ற மர்ம நபர் பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா திங்கள்கிழமை

சீனாவில் ஐந்து பேரைக் கத்தியால் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்ற மர்ம நபர் பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா திங்கள்கிழமை தெரிவித்தது: சீனாவின் மியுன் மாவாட்டத்தில் உள்ள ஜுகிசுகாங் நகரில் மர்ம நபர் ஒருவர் 5 பேரை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் அருகிலிருந்த காரில் ஏறித் தப்ப முயன்றார். அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. அதில், ஒருவர் பலியானார். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதசாரிகள் மீது மோதிய பிறகு அந்த இடத்தைவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com