சீனாவில் ஐந்து பேரைக் கத்தியால் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்ற மர்ம நபர் பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா திங்கள்கிழமை தெரிவித்தது: சீனாவின் மியுன் மாவாட்டத்தில் உள்ள ஜுகிசுகாங் நகரில் மர்ம நபர் ஒருவர் 5 பேரை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் அருகிலிருந்த காரில் ஏறித் தப்ப முயன்றார். அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. அதில், ஒருவர் பலியானார். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதசாரிகள் மீது மோதிய பிறகு அந்த இடத்தைவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.