உலகம்
இறுதிக்கட்டபோரில் சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: மைத்ரிபால சிறிசேன
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரண் அடைந்தோரின் பட்டியல் வெளியிடப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரண் அடைந்தோரின் பட்டியல் வெளியிடப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கை இறுதிகட்ட போரின்போது ராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பு முகாமில் இருந்தவர்களின் முழு விவரமும் விரைவில் வெளியிடப்படும் என அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.