வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ அரசுக்கு எதிரான போராட்டத்தில் 22 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ பதவி விலகவும், நாடாளுமன்றத்துக்குப் புதிய தேர்தல் நடத்தக் கோரியும் பல்வேறு தரப்பினர் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தலைநகர் காரகாஸ் அருகேயுள்ள அல்தமிரா பகுதியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வெனிசூலா அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞரை வெனிசூலா அரசின் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் ஈவு இரக்கமி ன்றி சுட்டுக் கொன்றதாக எதிர்க்கட்சி தலைவர் ஜோஸ் மேனுவல் ஓலிவரெஸ் தெரிவித்துள்ளார்.