ஜப்பானில் ஹெலிகாப்டர் விபத்து: 9 பேர் சாவு

ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
மலையேற்றத்தின் போது சிக்கிக் கொள்ளும் நபர்களை மீட்பது தொடர்பான பயிற்சிகளில் வார இறுதியில் ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்துவது வழக்கம். அப்படி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். நாகனோ மாவட்டத்தில் இடிபாடுகளிலிருந்து ஹெலிகாப்டரின் விமானி உள்ளிட்ட ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த மலைப்பகுதியல் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் மீட்பு நடவடிக்கைகள் திங்கள்கிழமையும் தொடர்ந்தன என்றார் அவர்.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பகுதிக்கு அரசு சார்பில் விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com