இந்திய மாணவனுக்கு சர்வதேச அறிவியல் விருது

அமெரிக்காவின் "இன்டெல்' நிறுவனம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியில், சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பிரசாந்த் ரங்கநாதன் என்ற மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய மாணவனுக்கு சர்வதேச அறிவியல் விருது

அமெரிக்காவின் "இன்டெல்' நிறுவனம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியில், சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பிரசாந்த் ரங்கநாதன் என்ற மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1,700 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஒரு வார கால போட்டி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
அப்போது, சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் பிரசாந்த் ரங்கநாதனின் செயல்திட்டத்துக்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இயற்கை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி ஒருவகை பயிர்ப் பூச்சிகளைக் கொல்வதற்கான அந்த செயல்திட்டம், விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்கு மாற்றாக இருக்கும் என்று பிரசாந்த் ரங்கநாதன் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரப் பள்ளி மாணவரான பிரசாந்த் ரங்கநாதன், 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com