நேபாள தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நேபாள தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை நள்ளிரவு 2.04 மணிக்கு (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவானது. காத்மாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நன்றாக உணரப்பட்டது. இருப்பினும், இதனால், உயிர்சேதம், பொருள் சேதம் ஏற்பட்டதாக இதுவரையில் தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தையடுத்து, 4.0 அலகுகளுக்கும் குறைவான அளவில் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள் உணரப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.