வங்கதேசத்தையொட்டி கடல் பகுதியில், ரோஹின்கயா அகதிகள் வந்துகொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் நீரில் முழ்கி பலியானதாக வங்கதேச எல்லைக் காவல் படையினர் தெரிவித்தனர்.
மியான்மரில் நிகழ்த்தப்படும் வன்முறையிலிருந்து தப்பி, ஏராளமான அகதிகள் வங்கதேசம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது புதன்கிழமை அதிகாலை அந்தப் படகு விபத்து ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் மேலும் சிலர் இறந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.