எகிப்தில் ஐ.எஸ். தாக்குதல்: 18 வீரர்கள் பலி

எகிப்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பில் சிக்கி பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.

எகிப்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பில் சிக்கி பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல்-அரிஷ் நகரில் பயங்கரவாதிகள் இந்த சாலையோர வெடிகுண்டுத் தாக்குதலை திங்கள்கிழமை நிகழ்த்தினர். பாதுகாப்பு படையினரின் நான்கு வாகனங்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பயங்கவராதிகளை போலீஸார் துரத்திச் சென்று தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com