ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியசு நாட்டில் இரண்டு போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 25 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.நா.வின் மனித நேய விவகார ஒத்துழைப்பு (ஓசிஹெச்ஏ) அமைப்பு கூறுகையில், 'இரண்டு போட்டி ஆயுதக் குழுக்களுக்கிடையே கடந்த 7 மற்றும் 8-ம் தேதி நடைபெற்ற சண்டையின்போது பிரையா நகரில் 10 பேரும், யாகாபி என்ற கிராமத்தில் 15 பேரும் உயிரிழந்தனர்' எனக் கூறியது.