அமெரிக்கா: கைதிகளிடையே நடந்த சண்டையில் 7 பேர் உயிரிழப்பு

தெற்கு கரோலினா மாகாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு சிறையில், கைதிகளிடையே நடந்த சண்டையில் 7 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு கரோலினா மாகாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு சிறையில், கைதிகளிடையே நடந்த சண்டையில் 7 பேர் உயிரிழந்தனர். இதில், சிறை அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை.
இராக்பாதுகாப்புப் படையினரைக் கொன்றது, கார் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 11 பேருக்கு, இராக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வங்கதேசம்
ஐந்து ரோஹிங்கயா அகதிகளை திரும்பப் பெற்றுக் கொண்டதாக மியான்மர் அதிகாரிகள் கூறியிருந்த தகவலை வங்கதேச உள்துறை அமைச்சர் அஸாதுஸ்மான் கான் கமால் மறுத்துள்ளார்.

இந்தோனேசியா
இந்தோனேசியாவில் கட்டடச் சுவர் இடிந்து விழுந்து அருகிலுள்ள கலைக் கூடத்தில் பயின்று கொண்டிருந்த 13 முதல் 15 வயதுக்குள்பட்ட 6 மாணவர்களும், 48 வயது மேலாளரும் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com