கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.35 கோடி வழங்கப்படும் என்று கத்தார் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, "தி கல்ஃப் டைம்ஸ்' நாளிதழில் வெளியான செய்தியில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.35 கோடியை ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல்-தானி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள் சார்பில் கேரளத்துக்கு மொத்தமாக ரூ.12.5 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் 30 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.