இலங்கையில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறியதாவது:
தலைநகர் கொழும்பிலுள்ள ஒரு கட்டடம் புதன்கிழமை இடிருந்து விழுந்தது. இதில், கட்டட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இடிந்த கட்டடத்துக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை. இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டடம், மளிகைப் பொருள்களுக்கான சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள பொருள்சேதம் குறித்து தகவல் இல்லை.
கட்டட விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார் அவர்.