ஈரானைச் சேர்ந்த ஏடிஆர் 72 ரக ஏசிமான் ஏர்லைன்ஸைச் சேர்ந்த பயணிகள் விமானம் தெஹரானில் இருந்து தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள யசூஜ் என்ற இடத்துக்கு பயணித்தது.
அதில், விமான ஓட்டி, துணை விமானி, விமான பணியாளர் இருவர், பாதுகாவலர்கள் இருவர் மற்றும் 60 பயணிகளுடன் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.
அப்போது, டீனா மலைப்பகுதியின் அருகில் சென்றபோது அங்கு ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி அதில் பயணித்த 66 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக உதவிக் குழுவினர் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என்று ஈரான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் மோஜ்தாபா கலேடி தெரிவித்துள்ளார்.