ஒசாகா: மெக்சிகோவின் ஒசாகா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 'மெக்சிகோவின் சாண்டா கேட்ரினா, ஒசாகா ஆகிய நகரங்களில் திங்களன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கடியில் 40 மீட்டர் ஆழத்தில் இருந்தது.' என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்நிலையில் மீண்டும் மெக்சிகோவில் திங்களன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.