இந்தோனேசியா: புலி தாக்கி தோட்ட தொழிலாளி சாவு

பனை எண்ணை தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார்.

பனை எண்ணை தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
சுமத்ரா தீவுப் பகுதி ரியாவு மாகாணத்தில் உள்ள பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் தோட்டத்தில் ஜூமையாதிக் (30) உள்ளிட்ட மூன்று பெண்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டுக்குள் இருந்து தோட்டத்துக்குள் புகுந்த புலி பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேரையும் வெறித்தனமாக துரத்தியது. அதில் இருவர் தப்பித்து ஓடிவிட, ஜூமையாதிக் மட்டும் பனை மரத்தின் மீது ஏறி தப்ப முயன்றார். ஆனால், அதற்குள் அவரை புலி தரையில் இழுத்துப் போட்டு கடித்துக் குதறியது. 
இதில், அவரது, கழுத்து மற்றும் கால் பகுதி பலத்த சேதமடைந்தது. 15 நிமிடம் புலியுடன் போராடிய ஜூமையாதிக் கடைசியில் புலியின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு பலியானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com