வங்கதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வங்கதேசத்தில் உள்ள பிரதமர் ஷேக் ஹசீனா அலுவகத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.