அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக எரிந்து வந்த "தாமஸ்' காட்டுத்தீ, முழுவதுமாக அணைக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அந்த மாகாணத்தின் வென்சுரா மற்றும் சாந்தா பார்பரா பகுதிக் காடுகளில் ஏற்பட்ட இந்தத் தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தக் காட்டுத்தீயில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாண வரலாற்றிலேயே "தாமஸ்' காட்டுத்தீதான் மிக மோசமானது என்று கூறப்படுகிறது. இந்தத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சலீஸ் போன்ற ஒரு மிகப் பெரிய நகரின் அளவுக்கு, சுமார் 1,141 சதுர கி.மீ. பரப்பளவு எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.