ஆஃப்கானிஸ்தான் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாணத்தில் உள்ள ஒரு கூட்டமைப்பு அரங்கில் சனிக்கிழமை இரவு திடீரென புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
அதுபோல காபூலில் உள்ள இன்டர்கான்டிநன்டல் விடுதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள இந்த இரு வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு தாலிபன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.