சிரியாவில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கொலான் பகுதியை ஒட்டிய குனைத்ரா மாகாணத்தை அந்த நாட்டு அரசுப் படைகளிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தப் பகுதி ஒப்படைக்கப்படுவதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.