இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஃபிஜி நாட்டு இந்திய வம்சாவளி இளைஞர் நீல் பிரகாஷை ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிரியா எல்லை வழியாக துருக்கிக்குள் கடந்த 2016-ஆம் ஆண்டு நுழைந்தபோது அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நீல் பிரகாஷ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த குற்றத்தை விசாரணையின்போது ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.