ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு 

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்னிக்கை 36 ஆக உயர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு 

காபுல்: ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்னிக்கை 36 ஆக உயர்ந்தது.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரம்ஜானை முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

சனிக்கிழமையன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டதால் ஆயுதங்கள் ஏதும் இன்றி தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர், அங்கிருந்த அரசுப் படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் நிகழ்வைக் கொண்டாடினர். 

அப்போழுது நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் பகுதியில் தலிபான்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.  இந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் சனிக்கிழமையன்று  வெளியானது.

இந்நிலையில் தாக்குதலில் படு காயமடைந்த மேலும் சிலர் அடுத்தடுத்து ஞாயிறன்று உயிரிழந்ததால் பலியானோரின் எண்ணிக்கை இன்று 36 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com