ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரான ஒசாகாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 5-ஆக உயர்ந்துள்ளது.