இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான இறுதிக் கட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காக அந்த நாட்டு அரசு அமைத்துள்ள சிறப்பு அலுவலகம், செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. இந்த அலுவலக அதிகாரிகள் மூலம், கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மாயமானவர்களின் நிலை குறித்து விசாரணை நடத்தப்படும்.