தங்கள் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவருக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கைகள் நம்பகத்தன்மையற்றவை என்று மியான்மர் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அந்த மாகாணத்தில் வெடித்த வன்முறைச் சம்பவங்களால் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.