பூடானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.
பூடானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் நிமா மற்றும் தவா. 15 மாதங்களேயான இந்த குழந்தைகளுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் சிறுவர்கள் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து சுமார் ஆறு மணி நேரம் மேற்கொண்டனர். இறுதியில், அந்த ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.