சிரியாவின் ஹமா மாகாணத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 அரசுப் படையினர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை கூறியதாவது:
சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள சொற்பமான பகுதிகளில் ஒன்றான ஹமா மாகாணத்தின் வடக்கே, அரசுப் படையிர் மீது ஐ.எஸ். தொடர்புடைய ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாத அமைப்பினர் வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினர் 8 பேர் உயிரிழந்தனர்.
ராணுவம் விலக்கப்பட்ட பகுதி அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.