கத்திக் குத்துக்கு போதை மருந்து காரணமல்ல'

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்டவர், போதை மருந்து உட்கொண்டிருக்கவில்லை என்று அந்த நாட்டு போலீஸார் தெரிவித்தனர்.
கத்திக் குத்துக்கு போதை மருந்து காரணமல்ல'

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்டவர், போதை மருந்து உட்கொண்டிருக்கவில்லை என்று அந்த நாட்டு போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கத்திக் குத்து தாக்குதல் நடத்திய நபர் போதை மருந்தின் தாக்கத்தில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். எனினும், அவரது ரத்த மாதிரியைப் பரிசோதித்ததில், அவர் எந்த போதைப் பொருளையும் உட்கொண்டிருக்கவில்லை என்று தெரிய வந்தது' என்றனர். ஆப்கனைச் சேர்ந்த அந்த 30 வயது நபர், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை கத்தியாலும், இரும்புக் கம்பியாலும் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com