ஆஸ்திரேலிய அங்காடிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராபெரி உள்ளிட்ட பழங்களில் மெல்லிய ஊசிகளை சொருகி வைத்து, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் மர்ம நபர்களைப் பிடிக்க முடியாமல் அந்த நாட்டு போலீஸார் திணறி வருகின்றனர்.
அந்த நாட்டின் பல்வேறு இடங்களில், கடைகளில் வாங்கப்படும் ஸ்டிராபெரி பழங்களில் மெல்லிய ஊசி மறைத்து வைக்கப்பட்டிருந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஊசி இருந்த பழத்தை உண்ட ஒருவர், கடுமையான உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.