பிலிப்பின்ஸை கடந்த வார இறுதியில் தாக்கிய மங்குட் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை புதன்கிழமை 81-ஆக உயர்ந்துள்ளது.
இடோகான் என்னுமிடத்திலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து கூடுதலாக உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்கத்துக்குள் மேலும் 59-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.