புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராசன் மறைவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் பேராசிரியர் சி.இராமமூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமிழக அரசின் செய்தித் துறையில் பணியாற்றியவரும் தமிழ் அரசி வார இதழ், புதிய பார்வை இலக்கியத்திங்களிருமுறை இதழின் ஆசிரியரும் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ், தமிழர் நலன்காக்க அயராது பாடுபட்டவருமான ம.நடராசனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பாகும்.
தமிழகத் தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல், இந்தியத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்காக குறிப்பாக ஈத்தமிழர்களுக்காக குரல் எழுப்பியதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு பல்வேறு உதவிகளைகளையும் செய்தவர் ம.நடராசன். அவரது புகழுக்கும் பெருமைக்கும் தமிழகத்தின் முள்ளிவாய்க்கால் பகுதி ஒருசிறந்த உதாரணமாகும். நடராசனின் மறைவுக்கு உலகத்தமிழர் பேரமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.