கன்னட நடிகரின் கவனத்தை திசைதிருப்பி, ரூ. 1 லட்சம் திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ஊரகம் நெலமங்கலா அருகே அண்மையில் கன்னட நடிகர் வினோத்ராஜ் காரில் சென்ற போது, ரசிகரை போல அவரிடம் பேச்சுக்கொடுத்து, கவனத்தை திசைதிருப்பி, காரிலிருந்த ரூ. ஒரு லட்சத்தை இளைஞர் திருடிச் சென்றார்.
இதுகுறித்து வினோத்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த நெலமங்கலா போலீஸார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், ஓஜிகுப்பத்தைச் சேர்ந்த ராஜு (29) என்பவரைக் கைது செய்தனர்.